இத்தனை லட்சம் தமிழர்கள் அழிவுக்கு சிங்களவர்களுக்கு உளவுச்சொல்லி ஈழப்பிழைப்புக்கு பதிலாக ஈனப்பிழைப்பு பிழைத்த டக்ளஸ் தேவானந்தாவையும் கருணாவையும் நினைத்துப் பாருங்கள். மலத்தை மிதித்து விட்டது போன்ற அருவருப்பு ஏற்படவில்லையா?
ரணிலுக்குப் பதிலாக ராஜபட்ச வந்தது தமிழின அழிவுக்கு முதற்காரணம்.
ஆயுதம் வழங்கிய “ரப்பர் முத்திரை” மன்மோகன் சிங் துணைக்காரணம்.
நாளைக்கொரு மனிதச் சங்கிலி ஒருவேளை தொடங்கி மறுவேளை வரும்வரை உண்ணாநோன்பு என்று பல்வேறு நாடகங்களை அரேங்கேற்றிக் கொண்டிருந்த கருணாநிதி இன்னொரு துணைக்காரணம்.
நான்காம் விடுதலைப்போர் முடிவுற்றதாக ராஜபட்சவோ மன்மோகன் சிங்கோ கருணாநிதியோ கருணாவோ கருதமாட்டார்கள். நான்கின் வளர்ச்சி ஐந்து என்பதை அவர்கள் அறியாதவர்கள் இல்லை.
ஒரு வேளை அந்த ஒற்றைப்பிரபாகரன் இல்லையென்றே ஆகிவிட்டாலும் ஓராயிரம் பிரபாகரன்களை காலம் உடனடியாக உருவாக்கும். எந்த விடுதலைப் போராட்டமும் இலக்கை அடையாமல் முற்றுப் பெற்றதாக வரலாறு கிடையாது.
- தினமணி சுருக்கம்-
No comments:
Post a Comment