கடந்து செல்லும் பாதையில் தன்னுடைய இறக்கைகள் விரிய இறந்திருந்த வண்ணத்துப்பூச்சிகாற்றின் வேகத்திற்கு ஏற்ப முன்னும் பின்னும் அசைய பார்ப்பவர்களின் கண்களுக்கு உயிராய் அந்த நேரம்அந்த வண்ணத்துப்பூச்சி.
அந்நேரம் அதனுடைய உறவுகள் உணர்வுகள் விட்டு பிரிந்த அதனுடைய உயிர்ப்பு அதனுடைய உடல் மட்டும் என்னுடைய கைகளில் தஞ்சம் புக...
இங்கும் அங்கும் அசைய என் கைகளில் வண்ணம் ஒட்டி விளையாடியது. உயிர் இருக்க பூவில் அமர உயிரற்று என் கைகளில அமர்ந்தது.
உயிர்ப்புடன் இருக்கையில் பறந்து அமரும் பூ வருகே செல்ல பறக்கும் திரும்பவும் அமரும்அருகே செல்ல பறக்கும் இந்நேரம் பூக்கள் அருகில் இருந்தும் அமரவில்லை சலனமில்லா அமைதி அது.
அதன்உடலை உள்காற்று அதனை விட்டு போனவுடன்வெளிகாற்று அசைத்தது, புரட்டியது எதிர்வினை இல்லை.
வெளிகாற்றின் போக்குக்கு ஒத்துழைத்தது இறந்திருந்த வண்ணத்துப்பூச்சி. உள்காற்று வெளியேற விறைத்து நின்ற உணர்வு கொம்புகள் கால்கள் ,விரிந்தபடியே இருந்த இறக்கைகள் இயக்கம் நின்று போக அதனுடைய உயிர்ப்பும் நின்று போனது.
அந்நேரம் அதனுடைய உறவுகள் உணர்வுகள் விட்டு பிரிந்த அதனுடைய உயிர்ப்பு அதனுடைய உடல் மட்டும் என்னுடைய கைகளில் தஞ்சம் புக...
இங்கும் அங்கும் அசைய என் கைகளில் வண்ணம் ஒட்டி விளையாடியது. உயிர் இருக்க பூவில் அமர உயிரற்று என் கைகளில அமர்ந்தது.
உயிர்ப்புடன் இருக்கையில் பறந்து அமரும் பூ வருகே செல்ல பறக்கும் திரும்பவும் அமரும்அருகே செல்ல பறக்கும் இந்நேரம் பூக்கள் அருகில் இருந்தும் அமரவில்லை சலனமில்லா அமைதி அது.
அதன்உடலை உள்காற்று அதனை விட்டு போனவுடன்வெளிகாற்று அசைத்தது, புரட்டியது எதிர்வினை இல்லை.
வெளிகாற்றின் போக்குக்கு ஒத்துழைத்தது இறந்திருந்த வண்ணத்துப்பூச்சி. உள்காற்று வெளியேற விறைத்து நின்ற உணர்வு கொம்புகள் கால்கள் ,விரிந்தபடியே இருந்த இறக்கைகள் இயக்கம் நின்று போக அதனுடைய உயிர்ப்பும் நின்று போனது.
No comments:
Post a Comment