புலிகள் விஷயத்தைத் தாண்டி மனித உரிமைகள் தொடர்பான இந்தியாவின் அனுகுமுறையும் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
இலங்கையின் கடைசிக்கட்ட ப்போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதையும் சர்வதேச போர் மரபுக்கு எதிராக சிங்கள ராணுவம் செயல்பட்டதையும் ஐக்கிய நாடுகள்சபை மற்றும் அமெரிக்க உளவுசெயற்கைக்கோள் காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன.
இதன் அடிப்படையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளி என அறிவித்து அவர்மீது சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த அமெரிக்கா முயன்று வருகிறது. இதன் முதல் கட்டமாக அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து தீர்மாணம் கொண்டுவருகின்றன.
அமெரிக்காவும் பிரிட்டனும் இந்தவிஷயத்தில் அக்கறைகாட்ட பக்கத்துநாடான இந்தியாவோ இலங்கையின் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் குறித்து சிறு எதிர்ப்பைக்கூட காட்டவில்லை.
-ஜீ.வி-
No comments:
Post a Comment