இணை சேர
சண்டைப் போட்ட
நார்த்தங்குருவிகள்
ரெண்டு
ஒன்றுஒன்றின் மீது
தாவி அமர்ந்து
கொத்தி கொத்தி
சண்டைப்போட
அருகில் வந்தமர்ந்த
அண்டங்காக்கை
சண்டைப்போட்ட
நார்த்தங்குருவிகள்
தனக்கு இரை
என நினைத்து
கொல்ல முயற்சித்த
அண்டங்காக்கை
பறந்துவிலகிய
நார்த்தங்குருவிகள்
திரும்பவும் சண்டையிட்ட
பறந்துவிலக
உணவு இல்லை
ஏமாற்றமாய்
தன்வழி சென்ற
அண்டங்காக்கை.
No comments:
Post a Comment