தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தொலைகாட்சியே வாழ்க்கை ஆகி விட்ட சூழலில் சேனலுக்கு சேனல் பிரபாகரன் மரணம் என்று நொடிக்கு நொடி காட்டினால் யாருடைய மனது பதற்றம் அடையாமல் இருக்கும் அய்யோ ..மரணமா ..என்று பதற்றம் அடையா இதயங்கள் சிலவாகதான் இருக்க முடியும்.
இன்று19-05-09 காலை எழுந்தவுடன் என்ன உண்மை ? பொய்யா? தெரிந்தவர்களுக்கு விவாதங்கள் நடைப்பெற்று கொண்டிருந்தது. செய்திதாள்கள் அத்தனையும் கொட்டை எழுத்துகளில் வீரமரணம் , சகாப்தம் முடிவடைந்தது, மரணம் அடைந்தார், விடுதலை புலிகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் என்று அச்சடித்து இன்றைய வியாபார கணக்கை பார்த்துவிட்டார்கள்.
பிரபாகரன் மரணசெய்தியை இலங்கை அதிபர் ராஜபக்சே அதிகார பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்த்து காந்திருந்த அத்தனை தொலைகாட்சி சேனலுக்கும் அல்வா கொடுத்து விட்டார்.
ஒரே செய்தி தாளில் முன்பக்கம் பிரபாகரன் மரணம் நடுபக்கத்தில் பிரபாகரன் நலமாக இருக்கிறார் என்ற நிகழ்வும் நடக்கதான் செய்தது.
பல்வேறு அனுமானங்கள் பல்வேறு செய்திகள் ஆனால் விடுதலைபுலிகளின் இயக்கதலைவர்…. பொறுத்திருப்போம்.
1 comment:
Visit this...
http://adaderana.lk/news.php?nid=3312
Post a Comment