Thursday, June 04, 2009

கூரையில் தூக்கியெறியும்வடைக்கு

காசுக்கார குடும்பம் அது. அவர்கள் வீட்டு வேலை தோட்ட வேலை கள் முடிய வேலைக்கு கூலி சரியாக கொடுத்துவிடுவார்கள். மிக அரிதாய் ஒரு சில பேர் தொடர்ச்சியாக அந்த குடும்பத்திற்கு வேலைக்கு செல்வார்கள்.

உலகத்தில் காசு இருந்தால் எல்லாம் நடக்கும் . அவர்களின் நினைப்பு உலகம் புரிந்தவர்களுக்கு தெரியும் காசு அவர் அவர் வாழ்க்கையில் எதுவரை என்பது அதனால் அதற்குரிய மரியாதையை கொடுத்துவிடுவார்கள்.

இவர்களோ நம்மிடம் உள்ள காசுக்காகதான் வேலைசெய்ய வருகிறார்கள் என்ற நினைவுகளினால் பத்து நாள் அவர்கள் வீட்டில் வேலைசெய்தவர் மரியாதை நிமித்தமாக கூட அவர்களை பார்த்துவிட கூடாது. கண்டு கொள்ளமாட்டார்கள் காசு கேட்பார் என்கிற நினைப்பில் பேச தயங்குவார்கள்.

இவர்கள் குடும்பத்தோடு பழகிய முறையில் நண்பன் ஒருவன் சொல்வான் நீங்கள் செய்வது சரியில்லை என்று அடு்த்தநிமிடம் அவர்களின் பதில் “கூரையில் தூக்கியெறியும்வடைக்கு ஒரு காக்கை இல்லை ஒன்பது காக்கை” என்பார்கள்.

நண்பன் தன்னுள் நொந்தவாறு காலம் பதில் சொல்லும் என்ற உள்ள நினைவுகளுடன் இடம் அகன்றுவிடுவான்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails