இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்கு சில யோசனைகளை மு.கருணாநிதி ப.சிதம்பரத்திடம் தெரிவித்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கை தமிழர்களின் நலனுக்கு முதன் முதலாக குரல் கொடுக்க வேண்டிய உரிமையுடையமு. கருணாநிதி அவரே குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில் மௌனம் சாதித்து விட்டார்.
கிட்டதட்ட எல்லா வன்கொடுமைகளைத் தமிழினத்துக்கு எதிராக
நடத்தி முடித்துவிட்டது இலங்கை அரசு. இன்னமும் நடத்தி கொண்டிருக்கிறது. உலக நாடுகளும் இதைப்பற்றி வருத்தமும் கண்டனத்தையும் தெரிவிக்கின்றன. சிறிதும் கவலை படாமல் இலங்கை அரசு மேற்கொண்டு தன்னுடைய இனவதையை தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கிறது.
விரைந்து செயல்படவேண்டிய நேரத்தில் யோசனைகள் இப்பொழுதுதான் தலைவர்களுக்கிடையே பரிமாற்றம் செய்யப்படுகிறது.
இவர்களுடைய யோசனைகள் செயல்வடிவம் கொடுக்கும் நேரத்தில் இலங்கை தமிழர்கள் கிட்டதட்ட தனக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை தாங்கிவாழும் பக்குவம் பெற்றிருப்பார்கள். எல்லாம் இழந்து நிற்கும் தமிழர்களின் மறுவாழ்வுக்கு இவர்கள் திட்டங்கள் செயல்படுத்தும் இடம் கிட்டதட்ட இலங்கை தமிழர்களின் மயானமாகத்தான் இருக்கும்.
No comments:
Post a Comment