நெருப்பா சுட்டது உடம்பு அவயங்கள் சோர்வாகி மிகுந்த களைப்பை ஏற்படுத்தியது. என்ன செய்ய வேலைக்கு வந்தான் அவன். வந்தாலும் அவனால் இயல்பாய் இருக்க முடியவில்லை.
பிறரிடம் கேட்டு அறிந்த நாட்டு வைத்திய மருந்தைஉட்கொண்டான்.
தீவிரம் குறைந்தது திரும்பவும் நெருப்பாய் தகித்தது.
வயலில் மேய்ந்த மாட்டை விரட்டப்போய் மாட்டினுடைய கயிறு காலில் சிக்கி காலின் தோள் வழுகொண்டதால் புண்ணாகி உடனே ஆறவில்லை. கால் நடக்க முடியாமல் அண்டங்கட்டி வந்தது இந்த சொரம்.
வேலைக்கு போய்தான் ஆகவேண்டும் சாமளித்து விடலாம் என்ற நினைப்பில் வேலைக்கு வந்தால் ஒன்றும் கதைக்கு ஆகவில்லை.
சொரம் மிகுதியால் கண்ணை மூடினால் நினைவுகளுக்கு ஒழுங்கு முறை வராமல் தவித்தது.
அவனுக்கு ஆஸ்பத்திரி போவ விரும்பாமல் சொரத்தை அனுபவித்தப்படியே உட்கார்ந்திருந்தான்.
1 comment:
hi........
Post a Comment