Friday, June 12, 2009

பாக்கி பணத்த கொடுடீ

பார்சல் டீ ஒன்னு கொடுங்க...

எம்மா..போண்டா எனக்கு.. கையிலிருக்கும் பிள்ளை கேட்டது.

ஆமா ..வாங்கி கொடுத்தா நீ திங்க மாட்டே..யாரு கையிலாவது கொடுத்துபுட்டு எம்மாபோண்டான்னுகேப்ப..

எங்க போண்டா ஒன்னு அப்படியே கணக்குல சேத்துங்குங்க..

எம்மா அப்பா வருது பார்.

சீக்கிரம் பாக்கிய கொடுங்க என்று டீக்கடைகாரரை அவசரப்படுத்தினாள் தாய்.

கணவன் வந்து விட ஆமா இருநூத்தி அம்பது ரூபா சம்பளம் கொடுக்கற வேலக்கு போவாத ..யாரு கடன் சொல்றாங்களோ அவங்களுக்கு போற வேலைக்கு என்று கணவனிடம் பாய்ந்தாள்.

பாக்கி பணத்த கொடுடீ..

நேத்து வாங்குன சம்பளத்துக்கு கணக்கு சொல்லு என்றாள் மனைவி.

எங்கடீ வந்து கணக்கு கேக்குற..

ஆமா உன்னுகிட்ட வீட்டுகுள்ள கேட்டா காதவ சாத்தி வைச்சு உதப்ப..

அதான் இங்க கேக்கிறேன்.

சரி ..சரி பணத்த கொடு என்றான் கணவன்.

பாத்துகய்யா உன் பொண்டாட்டி எவ்வளோ வெவரமா இருக்குதுன்னு என்று டீக் கடைக்காரர் கிண்டலடித்தார்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails