Friday, June 26, 2009

மரணயோகம்

நல்ல நாள் பார்தீங்கின்னா நாளைக்கு விறை விட்டுபுடலாம் என்று அந்த வேலைகாரர் சொன்னார்.

நீ வேற நாம என்னக்கு நாள் பாத்துருக்கோம்.

இல்லங்க அஷ்டமி நவமி இப்படி ஏதாவது இருந்துச்சுன்னா விறை விடமாட்டாங்க அதனாலதான்.

சரி நான் கேக்குறேன்.

சாமி நாளக்கு நல்ல நாளா பாத்து சொல்லுங்க …

ஏன் கேக்குறீங்க..

நாளக்கு விறை விடலாமுன்னு இருக்கோம் அதனாலதான்.

காலண்டர் பார்த்தார் சாமி நாளக்கு வேண்டாம் ரெண்டுநாளு கழிச்சு விடலாமே..

ஏன் சாமி..

நாளக்கு முழுக்க மரணயோகம் வருது. அப்புறம் அஷ்டமி நவமி ன்னு வருது பாத்து செய்யுங்க.

சரிங்க சாமி ..

விறை விட தேவையான அத்துனை ஏற்பாட்ட செஞ்சாச்சு இனி நிப்பாட்ட கூடாது.

விறைய விட்டுட வேண்டியதுதான் ஆண்டவன் கொடுத்த எல்லா நேரமும் நல்ல நேரம் தான்.

வா..பாத்துகலாம் சாயங்கலாம் விறைய விட்டுபுடலாம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails