வசந்த காலத்தின் வருகையை சாலையில் நிறைந்திருந்த அந்த புளியமரங்கள் அறிவித்தன. இளதளிர்கள் பூக்களால் நிறைந்திருந்தது மரம்.
அமைதியான சூழலில் எழுந்தது காற்றின் சப்தம். கண்களால் உடன் பார்க்கமுடியாப்படி கிளைகளின் ஊடே உட்கார்ந்திருந்த சிறுபறவைகளின் குரலோசை ஒரு மரம்
மரத்தின் கீழ் சிறுவர்கள் ஐந்து பேர்.
அன்று ஞாயிறு காலையிலே சங்கமம் ஆனார்கள்.
டேய்..நாம எல்லாரும் போயி ..இன்னும் அரமணி நேரத்துல வந்துடுவோம். இன்னிக்கு புளியம்பூ தொக்கு செய்வோம்.
தலைவனாக கருதப்பட்டவனின் வார்த்தைகள்.
அய்யா..நான் சீக்கரம் வந்துடுவேன்.
டேய் நீ வறப்ப உப்பு எடுத்துட்டு வாடா..
டேய் நீ என்னடா எடுத்துட்டு வர்ற
நான் மொளவா எடுத்துட்டு வர்றேன்.
சரி..டேய் ரொம்ப எடுத்துட்டு வந்துடுடாத பாத்துக்க...
நான் கொட்டாங்குச்சி...
பெரிசாடா ரெண்டு வேணும்.
சரி எல்லாரும் சாப்பிட போவலாம்.
முன்னடி வர்றவங்க புளியம்பூ பறிங்க நிறைய வேணும்.
கலைந்தது சிறார்கள் கூட்டம்.
காற்றின் சப்தம் சிறுபறவைகளின் குரலோசை கேட்டு கொண்டிருந்தது.
No comments:
Post a Comment