Friday, June 12, 2009

இனிமையாய் உன் நினைவுகளில்…

இனிமையான உன் நினைவுகளினால் என்னுள் சங்கீதம் இசைக்கும் ஞானத் திருவுருவே! வேத நாயகனே! அஞ்ஞான இருள் படைத்து அதை அகற்றி மெய்ஞான ஒளி தரும் பராபரமே! ஏக்கங்களின் விளைவாய் ஏமாற்றம் உண்டாக்கி பற்றுகள் நீங்க ஏற்றம் தரும் கருணைக் கடலே!கண்ணின் கருவிழியும் நீ காட்சியும் நீ! மாண்புகள் பலவும் நீ! மாசற்ற அன்பு நீ! ஆனந்த பிறப்பிடம் நீ! எழும் உன் நினைவுகளின் ஏகாந்தம் நீ!

நீபடைத்த படைப்பில் அனைத்துமே அர்த்தமுள்ளவை அவற்றின் வேறுபாடுகள் உன்னில் எழுந்தவை உன்னில் வளர்பவை உன்னில் மறைபவை.

இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என எல்லாம் கடந்து நீ படைக்கும் ஒவ்வொரு உலகமும் மாறுபாடுகளையுடயது. எல்லைகள் வகுக்க முடியா அளவில் பரந்து விரியும் பரம்பொருளே!

உன் அமைதியாய் மழலை பேச்சு இயற்கை எழில் தவழும் தென்றல் என எவ்வளவோ இருக்க உன் கோபமாய் வறுமை இயற்கை சீற்றம் என வெளிகாட்டுகிறாய்.

நீ வெளிப்படுத்தா ரகசியங்கள் ஆக நீயே இருக்க எல்லாவற்றிலும் எக்காலமும் நிறைந்து நிற்பவனே உன்னில் பணிந்து...

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails