ஜொ்மனியைச் சேர்ந்த ஹெம்ஹொட்ஸ் மருத்துவ ஆராய்ச்சி (Helmholtz Zentrum Munchen) நிறுவனத்தைச் சோ்ந்த ஆராய்ச்சியாளர்கள் உயிரினங்களின் உள் உறுப்புகளை படம் எடுக்கும் நவீன எக்ஸ்-ரே முறையை கண்டுபிடித்துள்ளனர். டாக்டர் வாசிலிஸ் தலைமையில் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் முடிவில் இந்த முறை கண்டறியப்பட்டுள்ளது.
துணி முதலியவற்றிற்கு நிறமூட்டப் பயன்படுத்துவதைப் போன்ற வேதியியல் கலவையை (டை) உடலில் ஊசி போட்டு செலுத்திய பிறகு அப்பகுதியில் லேசர் கதிர்களை செலுத்தி உள் உறுப்புகளின் தெளிவான படங்களை எடுக்கும் வகையில் இந்த நவீன முறை அமைந்துள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படு்த்தும் நுண்ணோக்கிகள் திசுக்கள் பற்றிய ஆராய்ச்சித் துறையிலும் பெரும்புரட்சியை ஏற்படுத்தவிருக்கின்றன.
No comments:
Post a Comment