நிற்பார் கவனிப்பார் செல்வார் . அவர் நின்றதற்கான காரணம் அவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். சில சமயங்களில் சந்தோர கல்லில் அமர்ந்து தான் வைத்திருக்கும் பீடியை பற்ற வைத்து ஆழ இழுத்து விடுவார். பேச்சு குறைவு வெறித்த பார்வை.
அந்த முதியவர் அகவை 70 இருக்கலாம். டீக்கடையி்ல் வேலை செய்தார். தேவை பட்டவர்களுக்கு டீ கொடுப்பது மற்ற சிறு வேலைகள் செய்வதற்காக நாளென்றுக்கு ரூ 70 சம்பளமாக தரப்படும்.
ஒவ்வொரு கடையாக இடம் மாறுவார். நான்கைந்து மாதங்கள் தான் ஒவ்வொரு கடையிலும் இதுவரை யில் பொண்டாட்டி சமார்த்தியம் பிள்ளைகள் வளர்ந்து தன் பிழைப்பை பார்த்து கொள்ள முடிந்ததை வீட்டுக்கு கொடுப்பார். வீடும் இவரை எதிர்பார்ப்பது கிடையாது.
முதலில் வேலை பார்த்த கடை பெரியது. அங்கு இவருக்கு சம்பளம் ரூ 110 டீ அதிகம் விற்றால் இன்னம் சேர்த்து தருவார்கள். இரவு ஒன்பது மணிக்கு கடைமுடியும் சம்பளம் வாங்கியவுடன் இவர் செல்லும் அடுத்த இடம் மதுபான கடை தினம் ஒரு குவார்டர் சில்லரை செலவு போக மீதம் உள்ள தொகை வீட்டுக்கு அல்லது லாட்டரி சீட்டுக்கு மறுநாள் சம்பளம் கையில் வாங்கியவுடன் முன் தினம் செய்த செலவுகள் போலவே தொடரும்.
எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் ஊருக்கு சென்று விடுவார் நான்கைந்து நாட்கள் கழித்து வருவார். வேலைக்கு வருவார் யேவ்..நீ ..வேலக்கு வேண்டா போய்யா..
ஒன்றும் பேசமாட்டார் போய்விடுவார்.
இவரை நம்பி யாரும் இல்லை யாரையும் நம்பி இவர் இல்லை என்ற அடுத்த கடை நோக்கி வேலைக்கு செல்வார். தினக்கூலியாக இருந்ததால் ஏதோ ஒரு இடத்தில் வேலை.
ரூ 70 சம்பளம் வாங்கியது பத்தவில்லை இவருக்கு குவார்டருக்கு போதுமானதாக இருக்க மற்ற செலவினங்களுக்கு போதவில்லை. அந்த கடை முதலாளியிடம்
இந்த பாருங்க நான் டெய்லி குவார்டரு குடிக்கிறேன். மத்த செலவெல்லாம் இருக்கு நீங்க குடுக்கறது பத்தாதுசேத்த தரமுடியுமா.. முடியாதுன்னா நான் வேலக்கு வல்லீங்க என்றார் .
அது சுமரான கடை இல்ல முடியாது சொல்லிவிட..
நான் நாளலேந்து வரமாட்டேன் வேற ஆள் பாத்துங்குங்க என்றார்.
எதையும் வெளிகாட்டாது முகம் அவருடைய செய்கைகளின் விளக்கம் அவருக்கானதே..
1 comment:
//எதையும் வெளிகாட்டாது முகம் அவருடைய செய்கைகளின் விளக்கம் அவருக்கானதே....//
எதார்தமான எழுத்து
Post a Comment