ஆழமான நம்பிக்கை அன்றைய தினம் கையிலிருந்து அறுந்து விழுந்தது. அந்த அய்யர் மந்தரித்து போட்ட முடிகயிறு.
மன குழப்பம் உடல்நிலை சரியில்லையென்றால் பயந்தகோளாறு இவைகளுக்கு மந்தரித்து முடிகயிறு கொடுப்பார்.
அந்த பகுதி மக்களுக்கு மருத்துவரை தாண்டிய இன்னொரு மருத்துவர். சில பேருக்கு சரியாகி விடும். பலபேருக்கு திரு நீறு மந்தரித்து போய் டாக்டரிம் காண்பிங்க.. ஜாதகம் பாருங்கோ .. இந்த கோயில் போய் அர்ச்சனை செஞ்சுட்டு வாங்க.. என்று சொல்லி அனுப்பி வைப்பார்.
வாரந்தோறும் செவ்வாய் வெள்ளிகிழமைகளில் அந்த கோவிலில் கூட்டம் இருக்கும். காசு அவர்களாக பிரியப்பட்டு அதிகம் தரலாம் குறைந்த பட்சமாக ரூ.11 வாங்குவார்.
நண்பனுடைய நண்பர் ஒருவர் அமெரிக்காவில் இருக்கிறார். வேலை பார்க்கும் துறை கம்ப்யூட்டர்வல்லுநர். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விட அமெரிக்க மருத்துவத்துக்கு அவரது உடல் நிலை சரியாகவில்லை.
இந்த நண்பனுக்கு போன் செய்து அவரிடம் மந்தரித்து திருநீறும் முடிகயிறும் வாங்கி அனுப்பிவை என்று செய்தி சொல்ல இந்த நண்பனும் அதன்படியே செய்தான்.
அவருக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்ப்பட்ட து என்பதை போன் செய்து தெரிந்து கொண்டான். எப்பொழுதெல்லாம் உடல்நிலை சரியில்லாமல் போகிறதோ இங்கிருந்து திருநீறும் முடிகயிறும் பயணத்திற்கு தயராகிவிடும்.
முடிகயிறு அன்றைய தினம் அவிழ்ந்து விழுந்தது ஆழமான நம்பிக்கையும் சேர்த்துதான் உடன் போன்செய்தார்நண்பனுக்கு கயிறு வாங்கி அனுப்ப சொல்ல..
No comments:
Post a Comment