அய்யருக்கு அங்க லட்சணம் மிகப்பொருத்தம் அவருக்கு.. இல்லீங்க இன்னம் கண்யாணம் ஆகலை அதனால பையன்னு சொல்லலாங்க..
அந்த பையனுக்கு வயசு முப்பது தான். காலையிலே குளிச்சுட்டு பட்ட போட்டு வந்துருவாருகோயில தொறந்து பூசை பண்ணவருவார் வந்து பேப்பரு படிச்சு நாலு தெருபையன்களோட பேசிகி்ட்டே இருப்பார். சாமி கிட்ட போறதுக்கு மணி ஒன்பது ஆயிரும்.
காலையிலே சாமி கும்பிட வந்தவங்க கோவில் வாசப்படியோட திரும்பி போயிருவாங்க இந்த பையன் போவரு சாமிக்கு தண்ணி ஊத்துவாரு வணங்கி இல்லீங்க வணங்கமுடியாய் சாமி குளிச்சிதா இல்லையான்னு அவருக்கு தான் வெளிச்சம். சாமிக்கு பொட்டு வப்பாரு நின்ன நிலையிலே சந்தனத்த நெத்திய பாத்து உருட்டி அடிப்பாரு போயி ஒட்டிக்கும்.
மந்தரம் கெடயாது மணி ஒலிக்கும் சாமிக்கு முன்னடி வெச்சி சாப்பாடு பாத்திரத்த தொறந்து மூடுவாருஐந்து நிமிடம் பத்து சாமி சாப்பிட்ரும் காகத்துக்குஒரு கவளம் ஊகும் .....
அஞ்சாறு வருசத்துக்கு முன்னடி காலையில எட்டு மணிக்கு ஒரு காகம் கூட்டம் டான்னு வந்து நிக்கும் அப்புறம் பன்னெண்டு மணி.. எல்லாம் மாறி போச்சு..
ஊருல உள்ளவங்க அப்பன் சரியில்ல..புள்ள எப்படி இருக்கும் என்று பேசுவார்கள்.
இவருக்கு மாற்றம் வர்ற ஆண்டவன் என்னிக்கு தேதி குறிச்சிருக்காரோ தெரியல போங்க..
1 comment:
அம்மா கூட சொல்லி வருத்தப்பட்டாங்க.
Post a Comment