Wednesday, July 22, 2009

தீ விபத்து

தீக்கிரையாகும் போது


தீக்கிரையானப்பின்
பலகார கடையின் புகைப்போக்கி குழாயிலிருந்து நெருப்பு பொறிகள் பறப்பது வழக்கம். அது வெளிவந்தவுடன் உடன் அனைந்து விடும். கரி சேர்ந்து அந்த குழாயினுள் அடைப்பு ஏற்பட்டிருக்கும் அதனால் அடுப்பு எரிக்கும் போது நெருப்பு பொறி வெடித்து கிளம்பியது. பக்கத்தில் உள்ள கடையின் மொட்டைமாடி மீது கீற்று கொட்டகை போட்டிருந்தார்கள் அதில் நெருப்பு பற்றியது அனுமானம் ஒன்று.

அனுமானம் இரண்டு இரண்டாவது பலகார கடையின் கீற்று கொட்டகை சரியில்லை கீற்றுகள் மிகவும் காய்ந்து போயிருந்தன அதனால் அடுப்பிலிருந்து தீப்பொறிகள் கிளம்பி தீப்பற்றி மற்ற கடைகளும் நாசமாயின.

அனுமானம் மூன்று கடலை கடையில் கடலை வறுக்கும்போது தீப்பொறிகள் கிளம்பி தீப்பற்றி விட்டது என அன்றைக்கு நடந்த தீ விபத்தை பற்றி வேடிக்கை பார்த்தவர்கள் பேசி கொண்டிருந்தார்கள். தீயைஅனைப்பது ஒரு புறம் வேகமாக நடந்து கொண்டிருக்க
தீயனைப்பு வண்டிகள் வந்து தீயை அணைக்கதொடங்கின . காற்றுகாலம் பற்றிய தீ வஞ்சிக்காமல் பக்கத்தில்
இருந்த அனைத்தையும் நாசம் செய்தது.

கடை வீடுகளுக்கு சொந்தகாரர்கள் தன் வீட்டிற்கு வந்துவிடுமோ என அஞ்சியவர்கள் அஞ்சியவர்களின் உறவினர்கள் நண்பர்கள் பொதுமக்கள் என அனைவரும் தீயணைக்க உழைத்தனர்.

வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் நின்றது. யார் எப்படியாக தீயை அனைக்கிறார்கள் என்பதை பார்க்க(அதில் என்னை சேர்க்கவும்) ..கூட்டத்தில் பதைபதைப்பு காணப்பட்டது. எரிந்ததற்கான மேற்கூறிய அனுமானங்கள் அலசப்பட்டன.

உயிர் சேதம் இல்லா இந்ததீ விபத்து பொருட் சேதத்துடன் முடிவடைய அவ்விடம் புனர்நிர்மானம் செய்துகொள்ள தன்னையே புதுப்பித்து கொண்டது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails