காலை கடைக்கு கிளம்பும் போது பையை ஊதிப்பார்த்தான். ஒரு நூறு ஒரு ஐம்பது நோட்டும் இருந்தது. அன்றைக்கு அவன் செய்ய வேண்டிய செலவு தொகை 1000 ஆகும்.
யாரிடம் கேட்பது அவனுக்கு தெரிந்தவர்களிடம் முதல் நாள் வரையிலும் முயற்சித்தான் எல்லாம் கைவிரித்தார்கள். ஏற்கனவே வாங்கியதை சரியானப்படி நாணயம் செலுத்ததால் கொடுக்க மனம் இருந்தவர்கள்கூட மறுத்துவிட்டார்கள்.
காலையில் எழுந்த போதே யோசனையுடன் எழுந்தான். யோசனை செய்து என்ன ஆகப்போகிறது. குழப்பம் குழப்பம் குடிப்பழக்கம் உண்டு அவனுக்கு நேராக போய் குடித்தான் இருந்த 150 காலி என்ன செய்ய..
தெரிந்தவர் ஒருவரிடம்போதையுடன் போய் கேட்டான் . அய்யா பாத்து குடுங்க நான் திரும்ப கொடுத்துவிடுகிறேன். முடியாது என்று மறுத்து விட ..
அய்யா நான் இன்னைக்கு தேவைக்கு பண்ணியே ஆகனும் கொடுங்கய்யா என்று அழ ஆரம்பித்தான்.
மிகுந்த சங்கடம் உருவானது. அவர் சத்தம் போட்டு பணம்கொடுத்தார். இன்னியிலிருந்து பத்தாவது நாள் கொண்டுவந்து கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு போனான்.
சொல்லிவிட்ட போன நான்காம் நாள் கடுமையான நெஞ்சுவலி ஏற்ப்பட்டது இவனுக்கு குடியினால் வந்த வினை .
அவர்கள் வீட்டில் செலவு செய்தார்கள். மருத்துவர் வீட்டுக்கு போவதும் வருவதுமாக இருந்தான்.
பத்துநாட்களும் கடந்துவிட பணம் வந்தபாடில்லை நாட்கள் போய் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment