Wednesday, August 05, 2009

வீணாய் போன உண்மை உழைப்பு


மறுநாள் ஆடிப்பெருக்கு மக்கள் அனைவரும் நீர் நிலைக்கு சென்று வழிப்பாடு செய்வார்கள்.
அன்று எல்லோர் வீடுகளிலும் பெரும்பாலும் மீன் கறி சாப்பாடாகத்தான் இருக்கும்.

கடந்த பத்து மாதமாக தன்னுடைய குளத்தில் மீன்கள்வளர்த்தார். தினசரி அதற்கு உணவிடுதல் அதை பராமரித்தல் என்று நேரம் எடுத்து கொள்வார்.

ஆடிப்பெருக்கு அன்றைக்கு நல்ல விலைக்கு விற்று விடலாம் என்ற நோக்குடன் முதல் மீன்பிடி ஆட்களை வைத்து மீன்களை பிடித்தார்.

உயிர் மீனாக இருக்க வேண்டும் இல்லையெனில் விற்க முடியாது. வீட்டில் உள்ள அனைவரும் நாள் முழுதும் உழைத்து மீன் பிடி ஆட்களுடன் சேர்ந்து மீன்களை பிடித்து தொட்டியில் விட்டார்கள்.

மீன்பிடி குளத்துக்கும் தொட்டிக்கும் நாற்பது அடி தூரம் அன்றைய தினம் குளத்தும் தொட்டிக்கும் உயிருடன்மீன்களை கொண்டு விடுவதற்காக நடை நடையாய் நடந்து சோர்ந்தே போனார்கள்.

நாற்பது ஐம்பது கிலோ மீன் இருக்கும் துள்ளி குதித்தது தொட்டியில் காற்றோட்டமாக தொட்டியை மூடிவிட்டு வேலை முடிக்கும் போகும் போதும் மணி இரவு 7.30 ஆகியிருந்தது.

உழைத்த உழைப்பு இமைகள் தானாய் மூடின. காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழும்பி பிடித்த வைத்த மீன்களை காசாக்க வேண்டுமே என்ற ஆவலில் தொட்டியி்ல் மீன்களை பார்க்க சென்றார்.

மேலிருந்த மூடியை அகற்றினார். பகல் இரவும் சேர்ந்தே இருந்தது அதிகாலையில் பிடித்து வைத்திருந்த எல்லா மீன்களும் செத்து விறைத்து போயிருந்தது.அப்படியே அதிர்ந்து போய் நின்றார்.கண்கள் தானாய் கண்ணீர் சொறிந்தன. முதல் நாள்பட்ட கஷ்டம் வேதனை நெஞ்சு முழுக்க துக்கமாய் அன்று முழுக்க செயல் பட பிடிக்காமல் இவரும் சாப்பிடாமல் வீட்டில் அனைவரும் சாப்பிடாமல் அன்றைய தினம் கழிந்தது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails