Friday, August 07, 2009

படித்தவுடன் பிடித்தது

ஒருவன் கங்கை ஆற்றில் இறங்கி ஜலத்தை தன் இரண்டு கைகளாலும் இறைத்துக் கொண்டிருந்தான். அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த வைதீகர் ஒருவர் இதைக்கண்டு “அப்பா ! தண்ணீரை ஏன் வீணாய் இறைக்கிறாய்?” என்றார்.

ஒருவன்: “ சென்னையிலுள்ள என் தென்னந்தோப்பு வாடிப் போவதாகக் கேள்விப்பட்டேன் அதற்காக இக்கங்கை நீரை இறைக்கின்றேன்.”

வைதீகர்: என்னப்பா! அடி வண்டல் முட்டாளாக இருக்கிறாயே! சென்னையிலுள்ள தென்னந்தோப்பிற்கு கங்கையிலிருந்து ஜலம் இறைத்தால் போகுமா? இந்தச் சொற்ப அறிவுகூட உனக்கு இல்லாமற்போனது பற்றி நான் மிகவும் வருந்துகிறேன்.

ஒருவன் : ஓய் வைதீகரே! கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். சமாசாரம் தெரியாமல் அமாவாசைக்குப் போக வேண்டாம் . சற்று நேரத்திற்கு முன் தாங்கள் நடத்திய காரியம் நினைவிருக்கிறதா? தர்ப்பணம் செய்வதாகச் சொல்லி நீங்கள் இரண்டு கைகளாலும் அள்ளி அள்ளி இறைத்த கங்கை நீர் மேக மண்டலம் சந்திர மண்டலம் நஷத்திர மண்டலம் இவைகளையெல்லாம் தாண்டிப் பல கோடி மைல்களுக்குப்பாலுள்ள மோஷலோகத்தில் வசிக்கும் பிதுர்களுக்குப் போய் சேர்கின்றபோது சில நூற்றுக்கணக்கான மைல்களுக்கப்பாலுள்ள சென்னைக்கு ஏன் கங்கை நீர் சேரக்கூடாது?

-ஆனந்த விகடன்-

படித்தவுடன் பிடித்தது பிடித்தவுடன் சிந்திக்கவும் செய்ததது.

2 comments:

பழனி வேல் ராஜா க said...

படித்தவுடன் பிடித்தது

காலப் பறவை said...

படித்தவுடன் பிடித்தது

LinkWithin

Related Posts with Thumbnails