Monday, August 10, 2009
கடன் வந்து மேலாட
இன்னைக்கு மதிய நேரம் திடீரென்றுஒரு வாய்ப்பு ஏற்பட்டது நண்பர் ஒருவர் மூலமாக பாருக்கு செல்வதற்காகதான்.
எல்லோரும் குடிப்பாங்கல்ல அந்த பாருக்கு தாங்க.. நண்பருக்கு நான் கம்பெனி கொடுக்க சென்றேன் குடிக்க
அல்ல பேச..
கூட்டம் குறைவாகதான் இருந்தது. உள்ளே நுழைந்தவுடனேயே இரு வாசகங்கள் கண்களில் படும்படி எழுதி வைத்திருந்தார்கள்.
“ கான மயிலாட கடன் வந்து மேலாட
கடன் வாங்கியவன் கொண்டாட
நான் இங்கு திண்டாட…”
வாடிக்கையாளர்களே நீங்கள் நாணாயமானவர்கள் தான் எங்களால் தான் கடன் கொடுக்க முடியவில்லை என்று ஒரு வாசகமும் அதற்கு அடுத்த வாசகம்
“ கடன் காரனாக இரவு போய் படுத்தால் காலையில் கடன்காரனாக எழுந்திருக்க வேண்டும். ஆகையால் இருப்பதை கொண்டு செலவு செய்ய கற்றுக்கொள்வோம்”.
என்றும் எழுதி வைத்திருந்தார்கள்.
யோசிக்கதான் வேண்டியிருந்தது. கெட்டதில் நல்லது இது தானா நண்பர்களே..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment