Saturday, August 15, 2009

சுதந்திர தின விருந்து



ஒன்னாம் நம்பர் நெய் கால் கிலோ கொடுங்க என்றார் புது வாத்தியார். அவர் ஆசிரியர் வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகியிருக்கும்.

வாத்தியாரிடம் ஒருவர் என்ன விசேடம் என்று கேட்க..

நாளைக்கு சுதந்திர தினம் கேசரி கிண்டி பள்ளிகூடத்துக்கு எடுத்துட்டு போவனும் என்றார்.

அப்புறம் என்ன..

வெண்பொங்கல் இன்னொரு வாத்தியார் செஞ்சு எடுத்துட்டு வந்துருவாருங்க இட்லி பூரி

ஹோட்டல்ல ஆர்டர் கொடுத்தாச்சு.

ஏ..அப்படி..இவ்வளவு விசேடமாவ சுதந்திர தினம் கொண்டாடுவிங்க என்றார்.

உங்க பள்ளி மாணவர்கள் எவ்வளவு செலவு நிறையல்ல பிடிக்கும் என்றார்.

எதுக்கு செலவு பிடிக்கும்.

பையன்கள் எல்லாருக்கும் கேசரி கொடுத்து டிபன் செய்ய…

ஆசிரியர் அதிர்ந்து போய் என்னது நீங்க வேற கொடி ஏத்த வர்றவங்க வாத்தியார் எல்லாருக்கும்டிபன்.

அப்ப பையன்களுக்கு ..

25 காசு சாக்லேட் 3 கிலோ எடுத்துவக்க சொல்லிருக்கேன் அதாங்க என்றார் ஆசிரியர்.

இவரும் விடாபிடியாக வருசத்துக்கு ஒரு நாள் வாத்தியாரெல்லாம் சேந்து காசு போட்டு நல்லபடியா பசங்க திங்கறத்துக்கு வாங்கி கொடுக்கலாம்என்றார்.

அதெல்லாம் காரியத்துக்கு உதவாதுங்க என்றார் ஆசிரியர்.

அந்த ஆசிரியர் வேலைபார்க்கும் பள்ளியில் மொத்தம் மாணவர்களின் எண்ணிக்கை 230 ஆசிரியர்களின் எண்ணிக்கை8 அவர்களுடைய மாத சம்பள தொகை ஒரு லட்சத்துக்கு மேல் ..

நீங்களே சொல்லுங்கள் ஆசிரியர்கள் கூடி முடிவு செய்தால் பள்ளி மாணவர்களுக்கு நல்ல தரமான இனிப்பு வழங்க முடியுமா? முடியாதா ?

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails