தமிழக அரசு கொண்டு வர உள்ள “ சமச்சீர் கல்வி திட்டம் ” என் மனதில் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. கூடவே கவலையும் வந்தது. அரசு திட்டங்கள் பெரும்பாலும் நல்லவையே செயல்படும் விதத்தில் நேர்மை இல்லாது போகும் போது அந்த தி்ட்டத்தின் முடிவுகள் காணாமல் போய்விடுகின்றன. அதுபோல் இத்திட்டமும் ஆகி விட கூடாது என்ற பயமும் கவலையும் கலந்தே உள்ளன.
இந்த தி்ட்டம் வெற்றியடையும் அதே சமயத்தில் உலகத்தோடு எந்த பகுதியிலும் போட்டி போடும் அளவிற்கு மொழி அறிவு துறை அறிவு என எல்லாவற்றிலும் தரமான கல்வியை சமச்சீர் கல்வி தி்ட்டம் வழங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
அப்புறம் ஆனந்தவிகடனில் வெளியாகியிருந்த மதன் கேள்வி பதிலில்
வெற்றியடைந்த மனிதனுக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்ற கேள்விக்கு அந்த பெண் என்பவள் அந்த மனிதனை பெற்ற தாயை குறிக்கும் என்று பதில் அளித்துள்ளார்.
பதில் பிடித்திருந்தது. பெரும்பாலும் தாயினுடைய வளர்ப்பில் தான் ஒவ்வொரு மனிதனுடைய வெற்றி என்பது என் கருத்து.
மனைவி என்பவள் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமே .
No comments:
Post a Comment