Monday, September 07, 2009

மனைவி நல வேட்பு நாள்



தினசரி செய்தி தாள்களுக்கு இடையே விளம்பரம் ஒன்று வந்தது. மனைவி நல வேட்பு நாள் அழைப்பிதழ் அறிவு திருக்கோயிலுக்கு வாருங்கள் என்று அழைந்திருந்தார்கள். கணவன் மனைவியாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

அந்த இயக்கத்தோடு தொடர்புடைய ஒருவரிடம் விபரம் கேட்டேன். மனைவி நல வேட்பு நாளில் கணவன் மனைவிக்கு சேர்ந்து தியானம்பயிற்சி சொல்லி தருவார்களாம்.

என்ன என்று விசாரிக்க கணவனும் மனைவியும் எதிர் எதிராய் உட்கார்ந்து கொண்டு ஒருவர் கையை ஒருவர் பிடித்து கொண்டு அவர்கள் சொல்லி தரும் ஒற்றுமைக்கான மந்திரங்களை தியானம் பண்ண வேண்டுமாம். அவ்வாறு செய்தால் கணவன் மனைவிக்குள் அமைதி உருவாகி ஒற்றுமை உருவாகுமாம் என்று சொன்னார்.

மேலும் ஒரு விபரம் சொன்னார். அதில் சிறப்புரை ஆற்றவரும் பெண்மணி தன் கணவனை எந்தரிக்க வேண்டுமென்றால் எந்தரிக்க வேண்டும் உட்கார் என்றால் உட்கார வேண்டும். இல்லாவிடில் ஏக ரகளைதான் அவர்கள் வீட்டில் கணவனை படாதபாடு படுத்தி விடுவார்.

இவர் சிறப்புரை ஆற்றி என்னத்த பண்ணி என்றும் அங்கலாயத்துகொண்டார்.

ஆமா நீங்க…

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails