Monday, September 14, 2009

பச்சோந்தி மனிதர்கள்.

மனது வலி்த்தது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சுயநலம். அவர்களின் நலன் சார்ந்த செய்கைகளில் கண்டு கொள்ளாதப்பொழுது உறவுகள் என்றால் குறை , குறை.

எதிராளியின் நலம் துச்சமென மிதித்து துவசம் செய்து அவர்களுடைய நலனில் அவர்களுடைய அக்கறை மிகப்பெரியது.

தன்னை இழந்து தட்டு தடுமாறி அவர்களின் நலம் காக்க போராடி இவர்களுக்கான வாழ்வில் இவர்கள் கண்டதெல்லாம் வாழ்க்கை இழப்பு. மதியா ? விதியா?

என்னால் காரியங்கள் ஆக வேண்டும். ஆன காரியங்களில் பலன் மட்டுமே தொடர்நிகழ்வாக பாவிக்கும் திறன்.

அவ்வாறு இல்லாவிடின் எங்கு பலனோ அங்கு எனது இருப்பு

என்று தன்னையே உருமாற்றி கொள்ளும் பச்சோந்தி மனிதர்கள்.

சந்தர்ப்பங்களும் சூழல்களும் தொடர்நிகழ்வாக இணைந்து வரும் காலம் வரை இவர்களுடைய வெற்றி ரசிக்க பட வேண்டிய ஒன்று.

காலங்கள் மாறும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails