Thursday, September 24, 2009

பயம் குழப்பம் செய்யும்.



வீதியின் நீண்ட மௌனம் தூரத்து சத்தமாய் நாயின் குரைப்பு குறிப்பிட்ட இடைவெளிக்கிடையேயான ராக்கோழிகளின் சத்தம் இருள் விட்டு வெளிச்சம் காட்டிய விளக்குகள்ஒற்றை ஆளாய் இவனின் பயணம்.

மனது விழிப்புணர்வுடன் வீதியின் இரு ஓரங்களிலும் கண்களால் ஆராய்ந்தப்படி இவனின் பயணம் பயத்துடன் நினைக்க ஆசைகள் ஆயிரம் கவலைகள் ஆயிரம் எதுவும் எண்ணங்களின் பிடியில் சிக்காமல் ஒதுங்கி இருக்க இருள் பற்றிய பயம் இவனில் அதிகம்.

சிறு பூச்சி ஊர்ந்து செல்ல இவனின் மனதில்தேளாய் உருவகம் பெற்று ஒரு நிமிடம் தன் நடைவேகம் குறைத்தான் விளக்கின் வெளிசத்தில் சிறுபூச்சியென தெரிந்துதொடர்ந்த பயணம் மனதில் வீற்றிருந்த இரவின் ஆதிக்கம்.

பயம் குழப்பம் செய்யும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails