வேண்டாத நினைவுகள்
ஒன்று கூடல்
வெடித்து கிளம்பிய
எரிமலையாய்
வந்து விழுந்த
வார்த்தைகள்
சோகமாய் உன்மனது
உட்கார்ந்து யோசிக்க
இடம் தேடிய கண்கள்
கிடைத்த சுவர்களின்
முடுக்கு
முகம் புதைத்து
காணாமல் போக
திட்டிய தாயின்
ஆறுதல்
வெடித்து கிளம்பிய
அழுகை
தாயின் சமாதானம்
அமைதியாய் நீ.
No comments:
Post a Comment