Tuesday, October 27, 2009

பெண் -1- பத்மினி

பெண்களில் நான்கு வகை பத்மினி , சித்தினி , சங்கினி , அத்தினி என்று வகைப்படுத்தபட்டுள்ளனர்.

செண்பக மலரோ என்று சொல்லும்படியான சிவந்த மேனி வண்ணமும் பண்பட்ட சொற்களையே பேசும் இயல்பும் எப்போதும் பொய்மையே கலவாத வாய்மையும் பிறர் கண்பார்வையிலே வீழ்ந்தரியாத கானகத்து மானைப்போன்ற மிரண்ட சுபாவமும் உடைய மாதர்கள்.

அறிவழகு உடையவரான சான்றோரையும் வேதசாஸ்திர விற்பன்னர்களையும் பல பல தேவர்களையும் உள்ளத்து அன்புடன் பணிந்து போற்றும் பக்தியும் எள்ளுச் செடியிலே விளங்கும் புத்தம்புது மலர் போன்று விளங்கும் மூக்கினையும் நடைபழகும் பிள்ளைப்போல வெள்ளையன்னம் போன்று தளர்ந்தசையும் நடையும் வெண்மையான மெல்லிய ஆடைகளிலும் வெண்மையான மலர்களிலும் விருப்பம் தூயதும் இனிய சுவை நிறைந்ததுமான உணவினைச் சிறுகவே உண்ணும் இயல்பும் ஒளிரும் வாள் போன்ற ஒளி வீசும் நெற்றியுடையவள்.

இது பத்மினி வகை.

1 comment:

நாளும் நலமே விளையட்டும் said...

இது எல்லாம் இங்க எழுதறிங்க?
இலக்கியம்? அல்லது பெண்களை பிரித்து பார்க்கும் (நிறத்தை வைத்து)
சிந்தனை?

LinkWithin

Related Posts with Thumbnails