கண்முன் விரிதிருந்த இயற்கையின் நீண்ட பரப்பு மறையும் சூரியன் வயலின் மேற்பரப்பில் பறந்த நூற்றுகணக்கான தட்டான்கள் எதிர் எதிர் திசையில் தன் இருப்பிடம் திரும்பும் காக்கையும் கொக்கும் அங்கும் இங்குமாய் வெள்ளைமேகங்கள் வானத்தில் நகர என் மனது மட்டும் வாழ்க்கை நிகழ்வுகளின் பிடியில்சிக்கி வெளிவர மறுத்தது.
தட்டான்களின் சுதந்திரம் பறவைகளின் சுதந்திரம் என் மனதை சிறிது அசைக்க பார்வைகள் நிலை குத்தி மனது அப்படியே இருக்க இயற்கையோட ஒன்றினைந்தேன். கால அளவு தெரியாமிக சிறிய நேரம் இணைந்து வெளிவந்து நான் மனிதன் அது இயற்கை என்று ஆனேன்.
திரும்பவும் மனிதன் வளர்த்த சமுதாயத்தின் கோரபிடிக்களுக்குள் சிக்கி கொள்ள பயணமானேன்.
No comments:
Post a Comment