அவர் போட்டிருந்த வெள்ளைசட்டையின் மேல் பட்டன்கள் நெஞ்சு தெரியும் வரை அவிழ்த்து விடப்பட்டிருந்தது.
இதுவரை அவர் அணிந்த சட்டைகளின் மேல் பட்டன்களை அவிழ்த்து விட்டதில்லை. அன்றைக்கு அவரினுடைய அந்த செய்கை மிகவும் விகாரமாய் பட்டது.
அவரை தினமும் பார்த்த கண்களுக்கு இன்றைக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கிறார் தெரியவில்லை? என்ற கேள்வியினை தடுக்க முடியவில்லை.
அதற்கு பிறகு வந்த நாட்களிலும் மேல் பட்டன்களை அவிழ்த்து விடாது சட்டை அணியவில்லை. பேச்சினுடைய தொனியும் மாறியது.
என்னடா இவருக்குவந்த வாழ்வு...கல்யாணம் பண்ணியவுடன் ஆள் மாறிவி்ட்டாரே ...
நீ வேற புது வண்டி கழுத்துல மின்னுது பாத்தியா நாலு பவுன் செயின் அதான் காரணம் அவரு மாற என்று நண்பன் சொல்லியது காதில் ஒலித்தது.
No comments:
Post a Comment