Wednesday, December 09, 2009

விலை மகளிர் தான் வாடிக்கை.



கல்வி உதவிதொகை வாங்குவதற்காக வருமான சான்றிதழ் வேண்டி கிராம நிர்வாக அலுவலர் நின்றான் அந்த சிறுவன்.

சார் இந்த பையனுக்கு குறைந்த வருவாய் போட்டு வருமான சான்றிதழ் கொடுங்க சார் என்றார் உதவியாளர்.

கஷ்டப்படுற பெரியகுடும்பம் சார் புள்ளங்க நிறைய பாத்து போட்டு கொடுங்க சார் என்று மேலும் கூறினார் உதவியாளர்.

யோவ்..அவன் அவன் பெத்து போட்டு போயிடுவான் அதுகெல்லாம நாம சர்டிபிகேட் தர முடியுமா.போ..போ..போயிட்டு அப்புறம் வர சொல்லு என்றார் கிராம நிர்வாக அலுவலர்.

மனதில் நொறுங்கி போனான் சிறுவன். அய்யோ என்ன இப்படி பேசிகிறார் என்று எண்ணியவாறு அண்ண சர்டிபிகேட் கொடுப்பாரா என்றான் உதவியாளரிடம்.

நீ போ நான் வாங்கி தர்றேன் என்றார்.

மனதில் தன் நிலைமையை நினைத்தவாறே வீடு திரும்பினான்.

இரவு பத்து மணி நல்ல குடிப்போதை ஏறியவுடனே பெண் சுகம் வேண்டும் அவருக்கு பேருந்து நிலையத்தில் நிற்கும் விலை மகளிர் தான் வாடிக்கை.

அன்றும் அப்படி தான் மதுவின் கிறக்கத்தில் விலை மகளிர் என குடும்ப பெண்ணை விபசாரத்திற்கு அழைக்க

எலா யார கூப்பிடற என்ற அந்த பெண் செருப்பை கழட்டினாள்.

யாரோ இவரை தெரிந்தவர் போய் தடுத்து அழைத்துப்போனார்.

வேறு யாருமல்ல மேற் சொன்ன கிராம நிர்வாக அலுவலர் தான்இந்த பெருமைக்கு உரியவர்.

இப்படியும் மனிதர்கள்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails