Monday, December 28, 2009

தேவ ராஜதந்திரமும் அரக்கமுட்டாள் தனமும்.

மார்கழி மாதம் காலையிலே ஆன்மீக பிரசங்கி ஒருவா் கோவிலில் பிரசங்கம் செய்தார். விரதங்கள் வழிபாடுகள் பற்றிய கருத்துகளை சொல்லிக் கொண்டிருந்தார்.

அதில் தேவர்கள் அமிர்தம் வேண்டி கடலை கடைய ஆட்கள் நிறைய தேவைப்பட்டார்களாம். தேவர்களை விட தாண்டி அரக்கர்கள் நிறையப் பேர் இருக்க அவர்களுடைய சக்தியை பயன்படுத்தி கொள்வதற்காக கடலை கடைந்தவுடன் கிடைக்கும் அமிர்தத்தில் பாதி என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுகடலை கடைந்தார்கள்.

அமிர்தம் வந்தது. மரணத்தை வெல்லகூடிய அந்த மருந்தை தேவர்கள் மட்டுமே உண்ண விரும்பி தேவர் ஒருவர்பெண் வேடமிட்டு அரக்கர்களை ஏமாற்றி அவர்களே அமிர்தத்தை உண்டதாக புராணம்.

என்ன அநியாயம் ?

அமிர்தம் பாதி என்று ஒப்பந்தம் செய்யப்பட்டு பாதி தராமல் ஏமாற்றியது ராஜதந்திரம்.

அதைப்பெறாமல் பெண்பித்தர்களாய் அலைந்து அமிர்தத்தை இழந்தது அரக்கர்களின் முட்டாள்தனம்.

கொஞ்சமும் புரியாமல் அய்யா தாங்கள் இப்போது சொன்ன அல்லது படித்த மேற் சொன்ன கதைக்கு என்ன அர்த்தம் என்று கேட்க...

நல்லது இப்படிதான் நடக்கும் என்பதற்கு உதாரணம் தேவர்களும் கெடுதல் செய்பவர்கள்கெட்டு அழிந்து போவதற்கு உதாரணமாகஅரக்கர்களை காட்டுகிறார்கள் என்று சொல்ல கொஞ்சம் தலை சுற்றியது.

இந்த கதைக்கு வேறு காரணம் ஏதோ இருக்க அவர் அவர்களுக்கு தோன்றியப்படிகாரணங்களை உருவாக்கி கொள்வதுதான் ஆன்மீகமா தெரியவில்லை.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails