உன்னோடு கோபம் கொண்ட நாள்முதலாய் என்னுடைய எண்ணங்களை ஆராய்கிறேன். செயல்களில் தடங்கல்கள் இல்லை. ஆனாலும் மகிழ்ச்சியாகசிரிக்க முடியாது தடுக்கும் உனது எண்ணங்கள்.
உனைவிட்டு விலகி நிற்க முற்ப்பட்டு உன்னுடைய நினைவுகளினால் உண்டான தாக்கம் களையமுடியாது தவிப்பது உண்மை.
உனது செயல்கள் உனது விருப்படியே அமைய வேண்டும் என்பதற்காக உனது வாதம் அது தவறாக இருந்தும் அதை முடிக்க வேண்டும் என்று நினைக்கும் உன் மனதை என்னவென்று சொல்வது.
நான் நானாய் இருக்க நல்ல உறவு அவசியம். சீர் கெட்ட உறவுகளில் எங்கே அமைதி?
நீயாய் புரிந்து கொள்ளும் வரை உன்னோடு என் கோபம் நிரந்தரமானது.