Wednesday, January 06, 2010

கர்ணனின் கொடைத்தன்மை

டாக்டர் ருத்ரன் அவர்கள் கதாபாத்திரங்களிடமிருந்து என்ற தலைப்பில் கர்ணனின் கொடைத்தன்மை பொதுவுடைமையின் பின்புலத்தில் பிறக்கவில்லை அவனுள் இருந்த பிறப்பு குறித்த சமூகக் கணிப்பு குறித்த ஒரு தாழ்வு மனப்பான்மையினாலேயே மேலோங்குகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

பலவீனமான ஒன்றை மறைக்க மற்றவர்களிடம் அதிகம் காணப்படாத அல்லது மற்றவர்களிடம் இல்லாத குணம் அல்லதுமற்றவர்களிடம் இல்லாத தன்மையைப் பெற்று தன்னுடைய வாழ்க்கை சூழலில் தன்னை தொடர்ச்சியாக தக்க வைத்துகொள்வதே இயற்கை. இயற்கையின் பல மாற்றங்கள் , வரலாற்றில் பல மாற்றங்கள் நிகழ காரணமே இந்த இயற்கையின் விதி தான். பலம் பலவீனம் என அலைப் போன்ற நிகழ்வுகள் ஒன்று வாழவும் ஒன்று இறக்கவும் செய்கிறது.

ஆகையினால் கர்ணனின்கொடைத்தன்மைக்கு அவனுடைய தாழ்வு மனப்பான்மையே காரணமாக கொள்ளமுடியாது. எல்லா உயிர்க்கும் உள்ள பொதுவான பண்புதான் இது என்பது என் கருத்து.

1 comment:

Anonymous said...

இருக்கலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails