உட்கருத்து புரிந்து போன கதைகள் கவிதைகள் நிகழ்வுகள் தொடர்ச்சியாக பார்ப்பது படிப்பது கடினம்.
நாம் படிப்பதற்கு உரிய கதைகள் கவிதைகள் தான் எவை?
பார்க்க தகுந்த வேறு மாதிரியான நிகழ்வுகள் என்ன? என்ற தேடுதலில் வியப்பை அளிக்கும் மையகருத்துகள் புதிய உணர்ச்சியை உண்டுபண்ணும் உணர்வாக நம்முள் முகம் காட்டி நிற்கும்.
டேய் என்ன புடிடா கருப்பா... என்று ஒருவன் கத்தினான்.
குளத்தினுள் விளையாடி கொண்டிருந்த பத்து பதினைந்து சிறார்களில் ஒருவன் . கருப்பா என்கிற கருப்புசாமி நீந்த தொடங்கினான்.
கத்தியவன் உள்ளுக்குள் முழ்கி காணாமல் போனான்.
கருப்பு தேடினான்.
இரண்டுநிமிடங்கள் ஆனது வேறொரு இடததில்வெளிவந்தான்.
டேய் கருப்பு அங்கே பாரு..டேய் கருப்பு.. ஒரு சேர கத்தினார்கள்.
கழுத்து திருப்பி முகம் பார்க்கும் வினாடியில் முழ்கி போனான். முழ்கிய இடத்தில் வட்டமாய் அலைகள் கிளம்பியது.
சிறார்களின் சந்தோச கத்தல்கள் குளம் குழம்பியது.
No comments:
Post a Comment