மூன்று ஆண்பிள்ளைகள் அந்தகுடும்பத்தில் அவர்களை கட்டி நல்லபடியாக வளர்க்கவேண்டிய பொறுப்பு அவர்களுடைய தாயிடத்தில் தான்.
நல்ல நாளில் நல்ல நேரத்தில் சம்பாதிக்க விமானம் ஏறிய கணவர் போனவர் போனவர்தான். வருடங்கள் ஓடியது தகவல் இல்லை .
வளரும் நிலையில் உள்ள பிள்ளைகளின் படிப்பு செலவு குடும்ப நிர்வாகம் என தடுமாற்றம் அடைந்த தாய்.
அதை யும் தாண்டி பிள்ளைகளை நல்லபடியாக நற்குணங்களுடன் வளர்க்க வேண்டும் என நினைத்தவள்.
வயதிற்குரிய அத்தனை குணங்களும் பிள்ளைகளுக்கு வரமால் இல்லை.
வயதிற்கு வந்த தன் பிள்ளைகளை அழைத்தாள். டேய் தம்பியலா.. என் பிள்ளை அங்க நின்னு தப்பு செஞ்சுது இங்க நின்னு தப்பு செஞ்சுது என்று ஊர் சொல்வது எனக்குபிடிக்காது.
உங்களுக்கு என்ன தேவையோ என்னிடம் கேளுங்கள். நான் உங்களுக்கு ஏற்பாடு செய்து தருகிறேன் என்று சொன்னாள்.
சிகரெட் பிடிக்க ஆசையா என்னிடம கேளுங்கள் …
தண்ணி அடிக்க ஆசையா என்னிடம் கேளுங்கள்….
எது வேண்டுமோ வெளியில் போய் அதை செய்யாமல் வீட்டிற்கு வாருங்கள் உங்களுக்கு தேவை பட்டதை செய்து கொள்ளுங்கள் என்று சொல்ல..
பிள்ளைகளுக்கு முழுசுதந்திரம் கொடுத்தாள் அந்த தாய்.
கொடுத்த சுதந்திரத்தை ஒருபொழுதும் தவறாக உபயோகபடுத்தாத பிள்ளைகளாய் இருந்தார்கள்.
வெளியில் அநாயசமாக சுற்றும் பழக்கமும் குறைந்து தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்கள்.
விசேடகாலங்களில் அம்மா கையால் கறி வறுத்து வீட்டு தோட்டத்தின் மர நிழலில் மது அருந்துவார்கள். மனம் நோகாமல் அவளும் செய்து தருவாள்.
இன்றைக்கு மூன்று பிள்ளைகளும் சமுதாயத்தில் நல்ல மதிப்போட வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
விளக்கமற எடுத்தேன் பிச்சுபுடுவேன் நாய போயி சம்பாதிச்சு வாடா என்று சத்தம்
தன் மகனை விரட்டி கொண்டிருந்தாள் இன்னொரு தாய்..தாயா அவள்?
No comments:
Post a Comment