முகம் வியர்த்து வழிந்து கொண்டிருந்தது. துடைக்காது முகம் கழுத்து வழியாக இறங்கி மார்ப்பு பகுதியை நனைத்தப்படி இருக்க பேசி கொண்டே இருந்தார்.
யாருக்கு மனசு பக்குவம் பத்தல ? என் ஆயோ ட தாலியவித்து படிக்க வச்சேன்.
இந்த பய படிக்கல ..அவன் படிச்சான். ஆன எனக்கு ஒரு பய ஒன்னும் செய்ய மாட்டேங்குறான்.
எலா..ஏந்தரிச்சு வந்தேன் உன்ன அடிச்சு பிச்சுடுவேன் கம்மானாட்டி ஏன்டா ... எலா... கல்லாவில் இருந்தப்படியே இறைந்தான் தம்பி.
அவருதான் குடிச்சுட்டு பேசுறாரு நீங்க பாட்டுக்கு வியாபாரத்த பாருங்க என்றார் நலம் விரும்பி ஒருவர்.
முறைத்து அண்ணைப் பார்த்தப்படியே பேசி கொண்டிருந்தான் தம்பி.
எலே..ஒ........பயலே நான் பாதுகாத்த வைச்ச சொத்து. அதுல உக்காந்துகிட்டு . இன்னிக்கு வந்த காசு டா நாய உனக்கு காசு தான்டா பெருசு வேறென்ன தெரியும் உனக்கு.
போடா..பு...மவனே நான் அப்படிதான் பேசுவேன என்றார் குடிகார அண்ணன்.
ஏன்டா..உன்ன... என்று கல்லாவிலிருந்து வேகமாய் தம்பி அடிக்க எந்தரிக்க அவரை அமுக்கினார்கள் நாலு பேர்.
உடுங்க என்ன திமிறினார் தம்பி.
ஆஹா.. என்று நக்கலாய் தம்பியபாத்து சிரிக்க ஆரம்பித்தார்.
யாருக்கு மனபக்குவம் பத்தாது கம்னாட்டி அங்க உக்காந்திருக்கிறது நீ. நீ தான்டா பொறுக்கனும் ஏன் ம…பயலே..
குடும்ப நண்பர் ஒருவர் வந்தார் வாங்க வண்டில ஏறுங்க..
பார்த்தார் அண்ணன் . அந்த பய என ஆரம்பிக்க..ஏறுங்க என முறைத்தார்.
முறைத்தவுடன் ஏறினார் அண்ணன் எலே.. நான் உன்ன பாக்குறேன்டா வண்டியில் ஏறி நின்று நாக்கு துறுத்தினார்.
வண்டி கிளம்பியது கொஞ்சம் தூரம் போனதும் எதிரில் வரும் வண்டிக்காக வேகம் குறைக்க குதித்து மனம் போன போக்கில் நடந்தார்.
No comments:
Post a Comment