வெளிசுற்ற ஆசை தான். வேலை மட்டுமே வாழ்க்கையாய் ஆகிவிட்ட நிலை செக்குமாடு தான். வட்டம் தாண்டி போக ஆசையாய் வட்டம் தாண்டுகையில்கிடைப்பதும் கிடைக்காமல் போக வாய்ப்பு அதிகம் தான். கிடைத்ததை தாண்டி அதிகம் கிடைக்க வாய்ப்புதான். வட்டம் தாண்ட பயம் அதிகம்.
இரக்கப்பட மனது அதிகம் கைதூக்கி விடுபவர்கள் மிகவும் அரிது. அவர் அவர்களின் நிலைப்பாட்டிற்கே தன்னையே தன்னை பார்த்துகொள்ள இன்னொருவரின் வாழ்வு என்பது கடினம் தான்.
சிலபேர் எல்லைகள் வகுத்து கொள்கிறார்கள். இன்னும் சிலபேர் தி்ட்டங்கள் போட்டுதகுந்தகாலங்களை எதிர்நோக்கமிக சிலபேர் தன்னளவில் நிரம்பி வழிந்தோடுவதில் பிறரையும் வளர்த்துவிட்டவர்கள் தான்.
நாளைக்கு கிடைப்பதை விட இன்றைக்கு கிடைப்பதை தக்கவைத்து கொள்ளும் மனோபாவம் தான் அதிகம். இத்தகைய மனோபாவத்திற்கு பலவிதமான சமுதாய சூழல்களே மிக அதிகம்.
2 comments:
உண்மை தான். இன்றைய நகரத்து வாழ்க்கை செக்குமாடு வாழ்க்கை தான்.
/*நாளைக்கு கிடைப்பதை விட இன்றைக்கு கிடைப்பதை தக்கவைத்து கொள்ளும் மனோபாவம் தான் அதிகம்*/
இன்றைக்கு கையில் கிடைக்கும் அளவு நாளைக்கு கிடைகதோ என்கிற பயம் தான் காரணம்.
நாளைக்கு கிடைப்பது நிரந்தரமாக கிடைக்குமா என்கிற பயமும் காரணம்.
Post a Comment