என்னில்
முளைத்து கிளைவிட
சுற்றம் பெருகி
பற்றும் பாசமும் பற்ற..
பற்று அறுக்க
என்னுள் உட்புக
காவி தான் கண்ணில்
தெரிய..
இல்லறமும்
துறவும் என்னுள்ளே..
உனை உணர்அனுபவி
அமைதியாய் இரு
காவியும்
குடுமியுடன் தாடியும்
பெற்றது சிரிக்க
கட்டியது அரவணைக்க
கோபம் காட்டி
சிரித்து மகிழ்ந்து
இல்லறமும்
துறவும் என்னுள்ளே…
விடாது இல்லறம்
விட்டது காவி
No comments:
Post a Comment