Monday, April 12, 2010

பெண் பிடிவாதம்



புரிந்து கொள்ளாத பெண் பிடிவாதம் உண்மையாய் நரகம்.  மகளோ  , மனைவியோ பெண்ணினுடைய எந்த பதவியாகவும் இருக்கலாம் ஆனால்  பெண்.

பெண்  என்று அவளிடம் கோபம் காட்ட முடியா சூழலில் கோபம்  காட்ட முடியாத நம்முடைய பலவீனத்தை அவர்களுடைய பலமாக உபயோகம் செய்ய அவ்வளவுதான் வேகம் வரும் இதயத்தின் அதிகபட்ச துடிப்போடு மௌனமாகிவிடும்.

பெண்ணிடமா நம் கோபம் காட்ட , நினைத்தவர்களின் அமைதி  அவர்களுக்கு எட்டாகனி தான்.  செயல்படுத்த முடிந்தவர்கள் ஆத்திரத்தின் அடுத்தகட்ட பிரயோகம் கன்னத்தில் அறை . இன்னும் கடுமையானவர்கள்  உச்சகட்டமாய்அவர்களுடைய தலைமுடியும்  பிடித்து அடித்தல்உதையும் தான்.

புரிந்து கொண்டவர்கள் நல்லது கெட்டது சொல்லலாம்.  பிரச்சனையின்போக்கு தக்கவாறே அவர் அவர்களுடைய மனது.
பெண்னுடைய மிகப் பெரிய ஆயுதம் பேசி கொல்லுதல் அல்லது பேசாமல் இருந்து கொல்லுதல்.

எது கேட்டாலும் எனக்கு தெரியாது ? என்று ஒற்றைவரி அல்லது நீண்ட மௌனம்.   

மகளாக இருக்கையில் என்னடி பொண்ண பெத்து வைச்சுருக்க? (பெற்றவன் இவன்)

மனைவியாக இருக்கையில் நான் போயியும் போயி உன்ன கட்டி கிட்டேன் பாரு ? என்ற வெறுப்பின் உச்சம் பெண் பிடிவாதம்.

பெண்னுடைய அடுத்தகட்ட ஆயுதம் சாப்பிட மறுத்தல்.
நான் இருக்குறது தானே  உங்களுக்கு தொந்தரவு நான் போயிறேன்(செத்து போயிறேன்) …. அப்புறம் ஒன்னும் உங்களுக்கு தொந்தரவு கெடையாது.

என்னடா வாழ்க்கை மயிறு ..சே..இப்படி இருக்க? என்ற விரக்தியின் உச்சமும் பெண் பிடிவாதம் தான்.

முதல் வரியை  கொஞ்சம் நினைவுப்படுத்துக...

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails