மாடிப்படிகளில் ஏறிதான் அவன் வீட்டிற்கு செல்லவேண்டும்.
குளத்தோரம் சிறுநீர் கழிக்கப்போனவன் அந்த இடத்தில்தூங்கிவிடலாம் போல் உள்ளது என்று சொன்னவுடன் பக்கத்தில் இருந்தவர்களும் அவனைப்பார்த்து சிரிப்பதை தவிர்க்க முடியவில்லை. அவன் குடித்த மது வேலை செய்ய
எல்லோரும் சிரிக்க அவனும் சிரித்தான்.
ஏங்க ..உட்கார்ந்தா தூங்கிடுவேன் வாங்க வீட்டுக்கு போவோம் என்று சொல்ல..
வாடா ..போவோம் என்று கிளம்பினார்கள்.
அவன் வீட்டின் அருகில் கோவில் ஒன்று இருக்க அதனுடைய படிக்கட்டில் அமர்ந்தான்.
சரி நீங்க போங்க..
நீ வீட்டுக்கு போடா..
நான் போயிறேன் நீங்க போங்க...
மாடிபடி ஏறமுடியுமாடா.. எங்க ரொம்ப மோசமா எடை போடாதீங்க என்ன ...
நான் போறேன் பாருங்க என்று கிளம்பினான்.
மாடிப்படியில் ஏறிவீட்டின் வாயிலை அடைந்தவுடன் அவனை இறக்கிவிட்டவர்கள் அந்தஇடத்தை விட்டு அகன்றார்கள்.
மறுநாள் அவன்
ஏங்க மாடிப்படி ஏற முடியுமான்னு சந்தேகம் வந்துட்டுங்க..
அப்புறம் என்னடா செஞ்ச ..
நாலு மூச்சு இழுத்துவிட்டு மூச்ச தம்மகட்டி ஏறுனங்க
போனது தான் தெரியும் சாப்பாடு பத்தியெல்லாம் நெனைப்பே இல்ல படுத்தது தான் தெரியும் பாதி ராவுல வயிறு கப..கப.. இருக்குங்க..
தண்ணிசாதம் இருந்திச்சு அவசரத்துக்கு ...
1 comment:
நல்ல அனுபவம்தானுங்க
Post a Comment