Monday, May 03, 2010

எந்ததுறையிலமவுசு அதிகம்



கணினி துறையில்வேலைப் பார்த்துவரும் நண்பர் ஒருவரிடம்  பேசி கொண்டிருந்தோம்.  இன்னொரு நண்பர்  டியூசன் சென்டர் நடத்திவருகிறார்.

அவரிடம் அந்த நண்பர் கேட்டார் இப்ப எல்லாரும்  சாப்ட்வேர்  ..சாப்ட்வேர் அப்படின்னு சொல்லுறாங்க..  இப்ப அதோட மவுசு கம்மி வருங்காலத்துல எந்ததுறையிலமவுசு அதிகம்  அப்படின்னு கேட்டாரு.

இப்ப நான் படிச்சு தெரிஞ்சிகிட்டவரையிலும் சோலார் எனர்ஜி ,   காற்றாலை மின்சாரம், இயற்கை விவசாயம்போன்ற துறைகளில் நல்லதொரு வாய்ப்பு உள்ளது.

நீங்க தான் உங்க மாணவர்களுக்கு   சொல்லனும்.நாங்கசொல்லறதுக்கும் நீங்க சொல்லற வித்தியாசம் நிறைய உண்டு. இன்னொரு கொடுமையான விசயம் என்ன அப்படின்னா ஆசிரியர் பயிற்சி முடிஞ்சு வாத்தியார் ஆன  பெரும்பாலானவர்கள் உலகில் நடக்கும் எந்த மாற்றங்களை அப்டேட் செய்து கொள்வதில்லை.  இவர்கள் எப்படி மாணவர்களுக்கு சரியான வழியை காட்டிவிடமுடியும்.

நாம தான் ஏதோ நம்மால் ஆன முயற்சி செய்துபார்க்கவேண்டும்  என்று கூற வேலை  ..வேலை என்று வேலை கிடைப்பதற்குமுன் அதற்கு உள்ள முயற்சி வேலை கிடைத்த பிறகு அதற்குண்டான அர்பணிப்பு உணர்வு மிகவும் கம்மியாக உள்ளது.

போலீஸ்காரர்கள் யாரும் வேலை கிடைத்தபிறகு உடற்பயிற்சி செய்வதே கிடையாது வேலை கிடைப்பதற்கு முன்  எப்படியெல்லாம் தன் உடலை வருத்தி கொண்டிருப்பார்கள் தெரியுமா..

மாற்றங்கள் தேவை.  அந்த மாற்றங்களை உங்களை போன்ற ஆசிரியர்கள் தான்   விதைக்க வேண்டும் என்று கூறினார்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails