Monday, May 10, 2010

சூஃபி பாடல் ஒன்று


நான் கனிப்பொருளாக இறந்தேன்
ஒரு செடியாக ஆனேன்
நான் செடியாக இறந்தேன்
மிருக நிலைக்கு உயர்ந்தேன்
மிருமாக நான் இறந்தேன்
மனிதனாக எழுந்தேன்
திரும்பவும் இறக்க நான் தயார்
தயக்கமேன்? என்ன குறை?
மீண்டும் ஒருமுறை மனிதனாக இறப்பேன்
மிகுந்த உயரத்தில் பறப்பேன்
வேண்டும் தேவதைகளால் ஆசி பெற்றேன்
எனினும் தேவதை நிலையிலிருந்தும்
மீண்டும் என்பயணம் தொடரும்
ஏனெனில் இறைவனைத் தவிர
வேண்டும் அனைத்தும் அழிந்திடும்
ஒருநாள் தேவதைகளும் மறைந்திடும்
எனது தேவதைத் தன்மையை நான்
இயல்பாய் தியாகம் செய்தபின்
கனவிலும் கற்பனையிலும் கண்டிராத
புதுமையாய் நிச்சயம் ஆவேன்
ஓ..என்னை வாழவிட வேண்டாம்
ஏனெனில் இல்லாமல் இருப்பது
ஓசைகளில் சேதி தன்னை வெளிப்படுத்தும்
ஒருநாள் அவரிடமே அனைவரும்
ஒடுங்குவதாய் திரும்பிச் செல்வோமென்று.

-சூஃபி ஞானி ஜலாலுதீன் ரூமி-
                       

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails