நான் கனிப்பொருளாக இறந்தேன்
ஒரு செடியாக ஆனேன்
நான் செடியாக இறந்தேன்
மிருக நிலைக்கு உயர்ந்தேன்
மிருமாக நான் இறந்தேன்
மனிதனாக எழுந்தேன்
திரும்பவும் இறக்க நான் தயார்
தயக்கமேன்? என்ன குறை?
மீண்டும் ஒருமுறை மனிதனாக இறப்பேன்
மிகுந்த உயரத்தில் பறப்பேன்
வேண்டும் தேவதைகளால் ஆசி பெற்றேன்
எனினும் தேவதை நிலையிலிருந்தும்
மீண்டும் என்பயணம் தொடரும்
ஏனெனில் இறைவனைத் தவிர
வேண்டும் அனைத்தும் அழிந்திடும்
ஒருநாள் தேவதைகளும் மறைந்திடும்
எனது தேவதைத் தன்மையை நான்
இயல்பாய் தியாகம் செய்தபின்
கனவிலும் கற்பனையிலும் கண்டிராத
புதுமையாய் நிச்சயம் ஆவேன்
ஓ..என்னை வாழவிட வேண்டாம்
ஏனெனில் இல்லாமல் இருப்பது
ஓசைகளில் சேதி தன்னை வெளிப்படுத்தும்
ஒருநாள் அவரிடமே அனைவரும்
ஒடுங்குவதாய் திரும்பிச் செல்வோமென்று.
-சூஃபி ஞானி ஜலாலுதீன் ரூமி-
No comments:
Post a Comment