Monday, May 24, 2010

வருமானம் - விவாதம்.

அன்றைய தினம் வருமானத்துக்கு தக்கவாறு செலவு செய்யவேண்டும் என்ற கருத்து நண்பர்கள் வட்டத்தில் விவாதத்திற்கு வந்தது.

இன்றைய சமுதாய சூழலில் செலவு செய்தால் தான் வாழமுடியும் என்கின்ற நிர்பந்தம். பெருகிவரும் செலவினங்கள்  தகுந்தவாறு நாம் தான் மேற்கெண்டு உழைத்து சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
எனவே  செலவினம் பெருகும் அதே வேளையில் நம்முடைய வருமானத்தை பெருக்கி கொள்ள தகுந்த முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும என்பது ஒரு நண்பனுடைய வாதம்.

நான் தற்பொழுது வரும் செய்துவரும்செலவுகளை குறைத்துகொள்வேன் என்பது இன்னொரு நண்பருடைய வாதம்.

அதெப்படி நீங்கள் செய்துவரும் செலவினங்கள் திடீரென்று குறைத்துகொள்ளமுடியுமா? எந்த மாதிரியான செலவினங்களைகுறைப்பீர்கள் ? என்ற எதிர்வாதத்துக்கு சரியான பதில் இல்லை.

நீங்க வேற நேற்று என்பிள்ளைகள் பூங்காவுக்கு  போக வேண்டும் என்று சொன்னார்கள் தவிர்க்க முடியவில்லை போக வேண்டிய நிர்பந்தம்  செலவு ரூ1000 ஆனது .  கட்டாயம்செய்யவேண்டியதை வாங்கி செய்யவேண்டிய சூழலில் கடன் வாங்கியாவது செய்யவேண்டியுள்ளது.

வாழ்கை முறையும் மாறிவிட்டது. செலவுகள் செய்தே ஒரு தரத்தை  எட்டலாம் அல்லது உருவாக்கி கொள்ளலாம் என்பது தான் உண்மை.  செலவுகள் செய்து பெற கூடிய தகுதியுள்ளவர்கள் சமுதாயத்தில் வாழ கூடிய தகுதியை செலவு செய்தாவது பெற்றுவிடுகிறார்கள். மற்றவர்கள்  ஏதோ அவர்களுக்கு கிடைப்பதை வைத்து வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.

சொல்லிட்டு எந்த திடீர் செலவு வரது கெடையாது. நாம அவசியம் பண்ணிகிட்டு இருக்குற செலவுகளை குறைப்பது கஞ்சதனத்துக்கு வழிவகுத்துவிடும்.  அதனால வரும்வழி கம்மியா இருந்துச்சின்னா மத்தவங்கள பாக்காம நாம பாட்டுக்கு போயிகிட்டே இருக்கவேண்டியது தான் .

ஆனா  இப்ப இருக்குற சமுதாய சூழல் அது முடியுமா?




No comments:

LinkWithin

Related Posts with Thumbnails