Friday, June 04, 2010

வாத விவாதங்களாய் வாழ்க்கை

வாத விவாதங்களாய்  போகும் வாழ்க்கை.    தலைதூக்கும்  ஈகோ.   தன்னை நினைக்காதவனை நான் நலம் விசாரிப்பதா தங்கையின் வீம்பு. எனக்கு மரியாதை  தராத  நீ இருந்தாலென்ன போனால் என்ன?  தேவை எனக்கு மரியாதை.

கஷ்டப்பட்டுஆளாக்கிய சொத்து அய்யோ  போகிறதே கதறும் அப்பன் கவலைபடாத பிள்ளைகள்.  இப்பதான் தெரியுது நான் செஞ்ச தப்பு புள்ளங்களா சரியா வளக்கல அப்பனின்  புலம்பல்.

குடும்பம் ஆகி புள்ளை பிறந்து தன் தகுதியை நிலை நாட்டாத அண்ணன் அக்கா உறவுகளுக்கு சேவை. வீட்டில் குழப்பம். என்னங்க நம்ம குடும்பத்த பாருங்க? எடீ எனக்கு தெரியுமடீ பதில் சொல்லி  கணவன்.

டேய் நேரம் கிடைச்சப்ப உழைச்சு காசு சேருடா? எல்லாத்துக்கும் உதவும் நண்பனின் புலம்பல் அலட்சியம் செய்தவன் வாழ்வு உழைத்தால் இன்றைக்கு சோறு. எங்கும் வராமல் உழைக்கும் நண்பன்.

கழுகு கண்ணாய் தன் லாபம்  மட்டும் பார்க்கும் பேசும்.பேச்சு  இனிப்பு  மயங்கி விழவைக்கும் கண்கள் பார்த்து சிரிக்கும் உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் ஓர் கணக்கு நம்பியவர்கள் ஏமாற்றபட்டவர்கள்.  ஒரு வட்டம் போய் அடுத்த வட்டம். அடுத்த வட்டம் போய் இன்னொரு வட்டம்  தொடரும் வாழ்க்கை.

பகுத்தறியும் இது தான் வாழ்வு என்று ஏட்டு படிப்பு வாழ்க்கை .  எதையும் தன்னுள் சிந்தித்து வெளிதள்ளும்  அல்லது தன்னுடன் இணைக்கும். இடம் அடைய  தகுதிகளை உருவாக்கி  இடம் நோக்கி பயணம் ஆகிறது.

வீராப்பு  முன்கோபம் புரிய வைக்க நிறைய பேசி னாலும் நான் சொன்னது தான்  வாழ்வு பிடிவாத வாழ்வு .  நல்லது நிறைய இருந்தும் எடுபடாமல்  போனது.

மனித வாழ்வு நாடகம் நேரங்கள் மாற வேடங்கள் மாறும். விருப்பமா விருப்பம் இல்லையா தேர்ந்தெடுக்க உரிமை கிடையாது வேடங்கள் ஏற்று நடித்து தான் ஆக  வேண்டும். நகம் கடித்து கொண்டிருக்கிறது.


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails