ஓட்டமும் நடையுமாக ஒரு பெண் ரோட்டு திசைநோக்கி சென்றாள். மிக குறைந்த இடைவெளியில் மோட்டார் சைக்கிளில் இருவர் வேகமாய் செல்ல…
சென்றவர்கள் ஒரே இனத்தவர்கள். ஏதோ அவர்களுக்குள் பிரச்சனை என்று நினைத்த வேளையில் சத்தம் போட்டப்படியே ஆண்களும் பெண்களும் ஓடி வந்துகொண்டிருந்தார்கள்.
முப்பது வருசமா இங்க இருக்கோம் இது மாதிரி நடக்கல..
நாங்க மனசுங்க கெடையாத… நீதி நியாயம் கெடையாத…என்று
சத்தம் போட்டப்படியே செல்ல..
போய் கொண்டிருந்த ஆண்கள் இருவரை இடைமறிக்க.. நேத்து எங்க பையன்களுக்கு அவங்க பையன்களுக்கு பிரச்சனை ரெண்டு பேருக்குள்ளேயும் அடிதடி நடந்துருக்குங்க.
இப்பவந்து யாரோ பத்து பேரு வந்துஆம்பள பொம்பளன்னு பாக்காமா அடிக்கிறாங்க அதான் கேஸ் கொடுக்க போறோம்.
அதுகுள்ளாகவே ஊர் பெரியவர்கள் போலீசுக்கு போன் செய்து கிராம பஞ்சாயத்த பேசிக்கிறோம் எப்.ஜ.ஆர் போடவேண்டாம் என்று சொல்ல போலீஸ் சார்கள் அன்றைக்கு கேஸ் பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்கள்.
மறுநாள் காலை எட்டு மணிக்கெல்லாம் கூட்டம் கூட ஆரம்பித்ததுபஞ்சாயத்தார்கள் சிலபோ் பிரச்சனைக்குரிய இரு இனத்தவர்களும் வந்திருந்தார்கள்.
ஓருஇனத்தவர் மட்டும் அதிகமாய் வந்திருந்தார்கள். பஞ்சாயத்து ஆரம்பித்தது இரு தரப்பாரை கூப்பிட்டு விசாரித்து கொண்டிருந்தார்கள்.
ஆரம்பம் முதலே ஒருவரை பார்த்து ஒருவர் வேகமாய் பேசி கொள்ள ஆரம்பிக்க…
நீ ஆம்பளயா இப்ப அடிடா பாப்போம் என்று கத்த..
நீ சும்மா இரு எதிர்தரப்பு பதில் சொல்ல..
திடீரென்று இரு இனத்தவர்களும் அடித்து கொள்ள ஆரம்பித்தார்கள். யார் யார் எங்கு இருக்கிறார்கள். யாரை காப்பாற்றுவது ? எப்படி அடிபடாமல் தப்பிப்பது என்றே தெரியாமல் போனது?
துரத்தி துரத்தி ஒருவரை ஒருவர் அடித்து கொள்ள ஆரம்பித்தார்கள். அய்யோ…அய்யா….
அவன புடிடா …அவன புடிடா….
அய்யா அங்க துரத்தி அடிக்கிறாங்கய்யா….
பொதுவில் உள்ளவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் போனது.
No comments:
Post a Comment