Monday, June 28, 2010

ஆத்ம சோதனை

ஆபீஸ் பணத்தை விரயம் செய்தால் சொந்தப்பணத்தை அது விரயம் செய்யும்.

துரோகம் பலன் கொடுத்தால் பிறகு பிறரை நாம் நமக்குத் துரோகம் செய்ய அழைக்க வேண்டியிருக்கும்.

குறுக்கு வழியில் பலன் பெற நினைத்தால் பலன் ஒதுங்கும்  அவமானம் வரும்.

அகங்காரம் அடிப்படையை அழிக்கும்.

உற்ற நண்பனுக்கு விரும்பிச் செய்யும் துரோகம்  நம் வாழ்வை துரோகத்தின் உற்பத்தி ஸ்தானமாக்கும்.

நல்லவனுக்கு வீம்பு சவால் விட்டால் பொல்லதாவன் அதை நிறைவேற்றுவான்.

உதவாக்கரை வாழநினைத்தால் மாறிய மனம்  மாற்றமான  பலன் தரும்.

உதவுபவர் காரியத்தைத் தள்ளிப்போட்டால் முக்கியமான காரியம் தள்ளிபோகும்.

ஆத்மசோதனை  முற்றும்.

கர்மயோகி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails