Wednesday, July 07, 2010

சமாதானம்

ஆயிரம் சமாதானங்கள்  சொன்னான். சமாதானம் சொல்லஅவனுடைய மனது   தயாராகவே  இருந்தது.  அவன் செய்த செயல்களால்    துயரங்களுக்கு உள்ளானாலும் திரும்ப திரும்ப  தான் செய்வது சரிதான்  என்று வாதங்கள் புரிந்து  தன்னுடைய வழியே செல்ல ஆரம்பித்தான்.

இவன் உழைப்பால்  மட்டுமே   குடும்ப  நடத்த வேண்டிய  நிலையில் இவனுடைய சமாதானங்கள்  மென்மேலும்  குடும்பத்தினுடைய பலத்தை பலவீனமாக்கி கொண்டிருந்தது.

எடுத்து சொல்பவர்கள் எடுத்து சொன்னார்கள் மௌ    னமாய் அக்கறையாய் கேட்பான்.  ஒன்றை முடிவு செய்து  அவன் வழியில் செல்வான்   கேட்பதற்கும் செய்வதற்கும் தொடர்பே இல்லாது இருக்கும்

வாழ்க்கை  சூழல் நெருக்க ஆரம்பிக்க  அதற்கான   முன் சோதனைகளை தர ஆரம்பிக்க உழைக்க நினைத்தாலும் உழைக்க முடியா சூழல்.

நிற்க வே ஓடுகிறான். சரியாக நிற்கும் வரை ஓடதான் வேண்டும். வாழ்க்கை  வாய்ப்புகளும் காலங்களும் தான் வளமாக்கும். காலங்களையும்  வாய்ப்புகளையும் தவறவிட்டவர்கள்  துன்பபட்டுதான்  ஆகவேண்டும்.

பணம் தான்  வாழ்வாகி விட  பணம் சம்பாதிப்பதற்கான   வழிகள் இருந்தும்  சம்பாத்தியம்  பண்ணாது  வாய்ப்புகள்  வீணாக    துன்பங்கள் நிரந்தரமாக ஆரம்பித்தது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails