Wednesday, July 14, 2010

குறி பார்க்கும் பிள்ளை



மடித்துப் போன  கீற்றின்
வழியே இறங்கும்
மழைத்துளிகள்
வருசமாகியும் மாற்றப்படாத
வீட்டின் மேற்கூரை
அம்மா சொல்
உணர்த்தியும்
கவலைப்படா அப்பன்
போக்கு
அப்பனுக்கு தப்பாமல்
பிறந்த பிள்ளையின்
போக்கும் அப்பா
வழியே..
கருமேகம் பார்த்தவுடன்
குறி பார்க்கும் பிள்ளை
மழை பெய்யகூடாது
மனதில் எண்ணம்
நான் என்ன செய்ய?
அம்மாவின் திட்டலுக்கு
அப்பாவின் பதில்
பெய்த மழை
நனையாது தப்பிக்க
வீட்டினுள் புலம்பெயர்
 உயிர்ப்புகளாய்..

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails