மடித்துப் போன கீற்றின்
வழியே இறங்கும்
மழைத்துளிகள்
வருசமாகியும் மாற்றப்படாத
வீட்டின் மேற்கூரை
அம்மா சொல்
உணர்த்தியும்
கவலைப்படா அப்பன்
போக்கு
அப்பனுக்கு தப்பாமல்
பிறந்த பிள்ளையின்
போக்கும் அப்பா
வழியே..
கருமேகம் பார்த்தவுடன்
குறி பார்க்கும் பிள்ளை
மழை பெய்யகூடாது
மனதில் எண்ணம்
நான் என்ன செய்ய?
அம்மாவின் திட்டலுக்கு
அப்பாவின் பதில்
பெய்த மழை
நனையாது தப்பிக்க
வீட்டினுள் புலம்பெயர்
உயிர்ப்புகளாய்..
No comments:
Post a Comment