Monday, July 26, 2010

எண்ணச் சிதறல்

மனதில்  தானாய்
தோன்றும் நினைவுகளில்
பல பேரது வாசமாய்
அவர்களின் நினைவுகள்
மனதில் தோன்றியப்படி…
மகிழ்ச்சி வருத்தம்
கோபம் துன்பம்
நினைவுகளில் இயல்பு
என் செயல்களில்
என் தொடர்பு இல்லாத
எண்ணச் சிதறல்
புலன்களின் தொடர்புகள்
அறுந்துபோய்
தன்னிச்சை  இயந்திரமாய்
புலன்களின் வெளிப்பாடு
பார்த்து சிரிக்கும்
குழந்தைக்கு கூட
பதில் புன்னகை புரியாது
பலபேரது எண்ணங்களை
மனதில் சுமந்தப்படி
உண்பதும் உடுப்பதுமாய்
வாழ்வு.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails